இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


புதன், 16 ஏப்ரல், 2008 / 5:30 AM

இந்த சாமி, சாமியா? ஆசாமியா?? - The Secret Aa-Swami

நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.

நேற்று 'தனிமை' போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.

இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது.

மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம்.

கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம்.

இதுதான் மூலப்படம்.
இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!!
அப்ப முதல் பந்தி...? சும்மா...!! ;)

கேடயக் குறிப்பு:
  1. பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான 'திறமைகள்' எதுவும் இல்லை.
  2. நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
  3. ஆகவே, 'நான் அவன்(ர்?) இல்லை...!'
  4. இது 'கேடயக் குறிப்பு' இல்லை... :)
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

19 Responses to இந்த சாமி, சாமியா? ஆசாமியா?? - The Secret Aa-Swami

  1. நிமல்/NiMaL
    April 16, 2008 5:43 PM
    சில விளக்கங்கள்:

    முதல் பந்தி: திரட்டிகள் வழியே வரவை கூட்ட...

    கேடயக் குறிப்பு: சும்மா குழப்ப...

    நடுவில்: நான் குழம்பி இருந்ததால்...
  2. கௌபாய்மது
    April 16, 2008 6:55 PM
    அடப்பாவிங்களா,

    கொஞ்ச நாளா வலையுலகில அந்த சீக்ரட் சாமியப் பத்தி கதைகள் உலாவினதால, இதுவும் அதப்பற்றிதான் இருக்குமென்று வந்தா..மொக்கை..மொக்கை.

    சுட்டிகளுக்கு நன்றி.
  3. வால்பையன்
    April 16, 2008 9:41 PM
    இந்த மாதம் சாமியார் மாதம்

    வால்பையன்
  4. நிமல்/NiMaL
    April 16, 2008 10:07 PM
    கௌபாய்மது,

    இது மொக்கையே..!

    அது சரி மொக்கை என்பதற்கு இலங்கையில் பயன்படுத்தும் சொல் என்ன? தெரிஞ்சவங்க சொல்லுங்கோ..
  5. சயந்தன்
    April 16, 2008 10:21 PM
    அது சரி மொக்கை என்பதற்கு இலங்கையில் பயன்படுத்தும் சொல் என்ன? தெரிஞ்சவங்க சொல்லுங்கோ..//

    இதற்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என சொல்லி விட முடியாது. மொழி வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்க வேணும். வேணுமெண்டால் நாங்கள் ஆலோசிக்கிறம் :)
  6. சயந்தன்
    April 16, 2008 10:24 PM
    உங்களுக்கு பின்னூட்டமிட அழுத்தும் போது நிறைய popup கள் தோன்றுகின்றன
  7. நிமல்/NiMaL
    April 16, 2008 10:32 PM
    வால்பையன்...

    சாமியார் மாதத்தில் (ஆ)சாமியாரானதில் எனக்கும் பெருமை தான். :)
  8. நிமல்/NiMaL
    April 16, 2008 10:35 PM
    சயந்தன்,

    //மொழி வல்லுனர்களோடு கலந்து ஆலோசிக்க வேணும். வேணுமெண்டால் நாங்கள் ஆலோசிக்கிறம் :)//

    உங்களைப் போன்ற மொழி வல்லுனர்களின் கருத்துக்களுக்காய் காத்திருக்கிறேன். :)
  9. நிமல்/NiMaL
    April 16, 2008 10:44 PM
    //சயந்தன் said...
    உங்களுக்கு பின்னூட்டமிட அழுத்தும் போது நிறைய popup கள் தோன்றுகின்றன//

    தகவலுக்கு நன்றி சயந்தன். நானும் சோதித்து பார்க்கிறேன்.

    தமிழ்மணம் தவிர்ந்த வேறெந்த நிரலும் எனது வார்ப்புருவில் இல்லை. எவ்வாறான popup என்று சொல்ல இயலுமா?

    சாமியார் யாராவது சூனியம் வச்சிருப்பாங்களோ...?!
  10. கௌபாய்மது
    April 17, 2008 1:55 AM
    தமிழ்மணம் தவிர்ந்த வேறெந்த நிரலும் எனது வார்ப்புருவில் இல்லை. எவ்வாறான popup என்று சொல்ல இயலுமா?

    நிமல் இது நீங்க போட்ட றோட்டு மேல போறான் கேடி என்ற இடுகையால் வரும் pop-up.

    ஏன் சயந்தனும் நீங்களும் இதுக்கென்றே பதினைஞ்சு இருபது பின்னூட்டங்களைப் போடவேணுமெண்டு நான் போட்டிருக்கிறன். போய் பாருங்கோ.
  11. நிமல்/NiMaL
    April 17, 2008 2:11 AM
    நன்றி கௌபாய்மது...!

    நான் பார்த்து விரைவில் சரிசெய்கிறேன்.
  12. நிமல்/NiMaL
    April 17, 2008 2:44 AM
    தற்காலிகமாக 'றோட்டு மேல போறான் கேடி இடுகையை' மாற்றியிருக்கிறேன்.

    இனி சரிவருமோ...?! :X
  13. Divya
    April 17, 2008 4:32 AM
    Nimal......neengalum samiyara??

    Mokkai nala than iruku Nimal!!

    \இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!!
    அப்ப முதல் பந்தி...? சும்மா...!! ;)\

    பந்தி or பத்தி????
  14. aanazagan
    April 17, 2008 8:30 AM
    சுஜாதா பாணியில சொன்னா நல்லா ஜல்லி அடிச்சிருக்கீங்க. ராஜேந்திர குமார் பாணியில சொன்னா "ஙே " ன்னு முழிக்க வைச்சிருக்கீங்க.
  15. நிமல்/NiMaL
    April 17, 2008 8:43 AM
    Divya,

    சாமியார் மாதத்தில் (ஆ)சாமியாரானதில் எனக்கும் பெருமை தான். :)

    பந்தி or பத்தி???? தெரியலியே...!
  16. நிமல்/NiMaL
    April 17, 2008 8:46 AM
    //aanazagan said...
    சுஜாதா பாணியில சொன்னா நல்லா ஜல்லி அடிச்சிருக்கீங்க. ராஜேந்திர குமார் பாணியில சொன்னா "ஙே " ன்னு முழிக்க வைச்சிருக்கீங்க//

    வாங்க aanazagan,

    இத அப்படியும் சொல்ல முடியுமா..?!!
    :)
  17. கௌபாய்மது
    April 17, 2008 10:43 AM
    நிமல்,

    தற்காலிகமாக 'றோட்டு மேல போறான் கேடி இடுகையை' மாற்றியிருக்கிறேன்.


    இப்போதும் அதே...அதே Pop-up வந்து எரிச்சலூட்டிய வண்ணமே உள்ளது. வார்ப்புருவை வடிவா ஒரு முறை பரிசோதியுங்கோ.
  18. ஆதித்தன்
    April 17, 2008 9:16 PM
    ["பந்தி , பத்தி இரண்டுமே ஒரேபொருலைக் குறிப்பன எனச்சொல்லப்படுகிறது."]

    சரபோஜி மகாராஜாவின் ஆஸ்தான சாமியார் என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

    ஹி ஹி ஹி!
  19. நிமல்/NiMaL
    April 17, 2008 9:25 PM
    ஆதித்தன் வாங்க வாங்க....

    நாளையோட சரியா ஒருவருசம். முடிஞ்சா அடுத்த வருசம் முயற்சிக்கலாம், இன்னொரு சுற்றுலாவுக்கு...!

    இந்தப் படத்தை எடுத்த்தே ஆதித்தன் தான்.
    அதுக்கும் சேர்த்து, நன்றி.

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.