ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும். (வாசிக்க)
Gravatar என்றால் என்ன ?
நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் Gravatar - globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக நாம் பல வலைத்தளங்களில் மறுமொழிகளை இடும் பொழுது இது மிகுந்த உதவியாக இருக்கும்.
நாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக(?!) பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும்.
நேற்று 'தனிமை' போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன்.
மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) முறையில் பிற்சேர்க்கை செய்ய முயற்சித்தது. Photoshopல் எவ்வாறு செய்யலாம் என்று இங்கே உள்ளது. GIMPஇலும் அதே முறையில் செய்யலாம். கீழே உள்ளது Picasaவில் பிற்சேர்க்கை செய்த அதே படம். இதுதான் மூலப்படம். இறுதியாக, இந்த படத்தில் இருக்கும் ஆசாமி... அது நான் தான்!! அப்ப முதல் பந்தி...? சும்மா...!! ;)
கேடயக் குறிப்பு:
பொய் சொல்வதை தவிர எனக்கும் அவருக்கும் பொதுவான 'திறமைகள்' எதுவும் இல்லை.
நீண்ட கேசத்தை தவிர வேறு ஒற்றுமைகளும் இல்லை. (இப்ப அதுவும் இல்லை)
PIT - ஏப்ரல் - 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பனொருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான்.
சரி, 'வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்!' என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்....
படத்தில இருக்கிறவர் பிறைதீசன். அவற்ற தனிமைய பற்றி தனிப்பதிவில பாக்கலாம். :)
இன்று எனது கணனியிலுள்ள பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது இந்த பாடலையும் பல நாட்களின் பின்னர் கேட்க நேர்ந்தது. இது 2005ம் ஆண்டுப்பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கிய 'முதல் சுவடு' இசைத்தொகுப்பில் இடம்பெற்றது.
Metal Rock வகை இசையை சார்ந்து அமைந்த இப்பாடல் வரிகளுக்காகவும் இசைக்காகவும் பலரின் எதிர்ப்பை சம்பாதித்த அதேவேளை, இன்னும் அதிக நண்ர்களின் வரவேற்பயும் பெற்றது.