இந்த வலைப்பதிவு
தற்காலிகமாக
செயற்பாட்டில் இல்லை.


வியாழன், 23 அக்டோபர், 2008 / 6:30 PM

ஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு...

நண்பர்களுக்கு வணக்கம்,

பல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை.

ஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) இந்த பதிவில் எழுதுவது சாத்தயப்படாது என்றே நினைக்கின்றேன். அது போலவே பலரின் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதும் அவ்வப்போது தான் சாத்தியப்படலாம்.

ஆனாலும் ஒலியோடை பொட்காஸ்ட் பதிவை தொடர முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே அங்கு வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.

எனவே இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

புதன், 15 அக்டோபர், 2008 / 3:45 PM

ஒலியோடை - ஒரு ஒலி பதிவு முயற்சி

தமிழ் வலையுலகில் எழுத்து சார் பதிவுகளில் இருக்கின்ற வளர்ச்சியளவுக்கு ஒலிப்பதிவுகள், வீடியோ பதவுகள் என்பன குறைவாகவே இருக்கின்றன. நான் அறிந்தவகையில் திரை இசை பாடல்கள் தரும் சில பதிவுகள் இருக்கின்றன (றேடியோஸ்பதி). இவை தவிர இன்னும் சில ஒலிப்பதிவு உரையாடல் வகையிலான பதிவுகளும் இருக்கின்றன (சாரல்). ஆனாலும் இத்தகைய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன.

தமிழில் தனித்த பொட்காஸ்ட் (தமிழ்??) முயற்சிகளும் குறைவுதான். இத்தகைய சூழலில் கேட்கும் ஒரு வாசகர்/நேயர் வட்டத்தை வலையுலகில் உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஆனாலும் இவ்வாறு யோசித்துக்கொண்டே இருப்பதை விட முயற்சித்து பார்ப்பதுதான் உத்தமம் என்றவகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் 'ஒலியோடை'

வாரம் ஒரு பொட்காஸ்ட் என்றவகையில் ஒரு தமிழில் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது 'ஒலியோடை'. இந்த பொட்காஸ்ட் தொழில்நுட்ப விடையங்களை இலகு தமிழில் தரும் ஒரு முயற்சியாக வெளிவருகிறது. இந்த பொட்காஸ்ட் பதிவில் என்னுடன் ரமணன், மற்றும் அருணன் பங்குபெறுகின்றனர். அத்துடன் இனிவரும் காலங்களில் பல புதிய பகுதிகளையும் சேர்க்கும் எண்ணம் உள்ளது.

எங்களுக்கு இது ஒரு புது முயற்சி, ஒரு புது அனுபவம்...
எங்கள் இந்த முயற்சியில் உங்களின் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்...

எமது அடுத்த பொட்காஸ்ட் 18-10-2008 சனிக்கிழமை வெளியாகும். மேலதிக விபரங்களுக்கு: http://oliyoodai.blogspot.com/

நன்றி:
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: podcast, tamil, oliyoodai, பொட்காஸ்ட்

வியாழன், 9 அக்டோபர், 2008 / 5:30 PM

நான் வாசிக்க விரும்பும் 'சே' - Che Guevara

இன்று தோழர் சே'யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார்.

சே குவேரா அல்லது 'சே' என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) எனக்கு முதலில் அறிமுகமாவது 1999-2000 ஆண்டுக்காலப்பகுதியில் தான். அப்போது தான் நான் மார்க்ஸிசம், சோசலிசம் போன்ற பலவற்றையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அக்கலப்பகுதியில் தான் இன்னொரு புரட்சியாளராக சே அறிமுகமாகிறார். அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களிலும் சே தொடர்பான பல தகவல்களை கேட்டும், வாசித்தும் அறிந்திருக்கிறேன்.

இத்தகைய பலதரப்பட்ட வாசிப்புக்கள் சே இன்னொரு புரட்சியாளர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்ற பிம்பத்தை என்னுள் உண்டாக்கின என்றே எண்ணுகிறேன். ஆனாலும் இன்று சே ஒரு வியாபார குறியீடாக (fasion icon) மாற்றப்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் எதிர்மறை விளைவு இவ்வாறானதாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே எனது அவா.

சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல பரிமாணங்களை கொண்டிருந்த சே பற்றி நான் தெரிந்து கொண்டுள்ளவை மிக சொற்பமே. அதனால் தான் சே பற்றி இன்னமும் வாசிக்க விரும்புகிறேன்...!

பி.கு: ப(சி)லர் தெரிந்து கொள்ள விரும்பிய என் குறுந்தாடிக்கான காரணத்தை இந்த பதிவு கொடுத்திருக்கலாம். :)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

எலி புரூஸ்லீ ஆன கதை....!

இந்த பதிவில் இடம் பெறும் சம்பவங்களும், கூறப்படும் பெயர்களும் அனேகமாக உண்மையே. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்படவேண்டிய தேவை இருந்தாலும் மாற்றப்படவில்லை. இந்த பதிவின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. இது ஒரு தீவிர ஆராய்சியின் முடிவாக எழுதப்படுவதுடன் இதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பாகவும் கருதலாம்.

முன்னொரு காலத்தில மொரட்டுவை பல்கலைக்கழக்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவாக தருகிறேன். எலி எலி என்று (இரண்டாவது எலி எதிரொலி) ஒரு நல்ல மாணவன் அங்கு படித்துவந்தார். அவரின் முதலாம் வருடத்திற்குரிய தோற்றத்தை இந்த படத்தில் காண்க.

இவ்வாறாக எலி என்ற காரணப்பெயரை பெற்று படித்து வந்த அந்த மாணவன் எல்லோராலும் அவரது தோற்றத்தை காரணம் காட்டி கிண்ணலடிக்கப்பட்டார். இது அவரின் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்திய அதேவேளை, அவர் தானும் வளர்ந்து காட்டுவேன் என்ற வைராக்கியத்தையும் பெற்றார். இதற்கான வாய்ப்பு அவருக்கு அவரின் மூன்றாம் வருடத்திலேயே கிடைத்தது.

அவர் தொழில் பயிற்சிக்காக (Industrial Placement) தெரிவு செய்யப்பட்ட IFS எனும் மென்பொருள் நிறுவனத்தில் அனைவருக்கும் பகல் உணவு இலவசமாக வழங்கப்படும். ஆயினும் எலியானவர் அங்கு வழங்கப்பட்ட உணவை பயிற்சிக்காலத்தில் தவிர்த்தே வந்துள்ளார் என்றும் அக்காலப்பகுதியில் தனது நண்பர்களை சந்திப்பதையும் குறைத்து வந்துள்ளார் என்றும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறு 6 மாதங்கள் தலைமறைவாக (தொப்பியோடு) திரிந்த எலி 6 மாத முடிவிலேயே பொதுவில் வெளிப்பட்டிருக்கிறார்.

6 மாதங்களின் பின் எலியை பலர் றோட்டில் கண்டும் கதைக்காமல் போயிருக்கிறார்கள். இதனால் கடுப்பான எலி அவர்களை மறித்து தான் தான் எலி என்று எடுத்து சொல்லியும் பலரால் நம்ப முடியாமல் இருந்திருக்கிறது. காரணம் எலி ஆறே மாதத்தில் புரூஸ்லீ போல் மாறி இருந்திருக்கிறார்.

இது எவ்வாறு சாத்தியம் என்று சந்தேகம் கொண்ட நாம் தீவிரமாக ஆராய்ந்ததில் பின்வரும் இரு புகைப்படங்கள் சிக்கின.

எலியின் உணவுக் கோப்பை.


எலி வீட்டில் காணப்பட்ட சமையல் புத்தகம்.

அதுவரை காலமும் சைவ பட்சியாக் அறியப்பட்ட எலி உண்மையில் ஒரு 'முட்டை சைவம்' வகை என்ற இரகசியம் இதன்பிறகுதான் வெளிப்பட்டது.

இந்த புகைப்படங்களையும் இதர சாட்சியங்களையும் ஆராய்ந்ததில் நாம் பெற்ற முடிவுகள்:
  • சைவ பட்சிகளில் பலவகை உண்டு
1. முட்டை சைவம்
2. முட்டை கேக் சைவம்
3. சிக்கன் சைவம் (இதில ஒருவகை ரோஸ்ற் சிக்கன் சைவம்)
4. மீன் சைவம் ... மற்றும் இன்ன பிற

(இவர்களெல்லாம் சைவம் என்று சொல்லிக்கொண்டு இப்படியான பதார்த்தங்களையும் சேர்த்து அடிக்கிற ஆக்கள்.. :) )
    • சைவ உணவுகளை மட்டும்(?) உண்பதன் மூலமும் உடல் எடையைக்கூட்ட முடியும்.
    • ஒவ்வொரு நாளும் ஒரு முட்டைக்கோப்பி குடிப்பது உடம்பு வைக்க உதவும். (இது எலியின் பகிரங்க அறிக்கையிலிருந்து பெறப்பட்டது). இதைக்கேட்டு இன்னும் fifty அடிக்காத சில பேர் (50 கிலோ எடை தாண்டாதவர்கள்) முட்டைக்கோப்பி இரகசியத்தை பின்பற்றுவதாகவும் தகவல்.
    • இவ்வாறாக உடலை மெருகேற்றிய பின் உடலிறுக்கமான T-Shirt களை தெரிவு செய்து அணிய வேண்டும். ('ஏதாவது' பலனை பெறுவதற்கு... எலிக்கு பலன் கிடத்ததா இல்லையா என்பது இன்னும் அறியக்கிடைக்கவில்லை). நீங்கள் சாதாரணமாக நடுத்தர அளவு (medium) அணிபவராயின் சிறிய அளவு (small) T-shirt ஐ தெரிவு செய்தல் நலம். (சும்மா exaggerate பண்ணிக்காட்டத்தான்..!)
    • மென்பொருள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கெல்லாம் தொப்பை மட்டும் வைக்கிறது என்ற கூற்றுக்கு எதிர்மறுப்பாக அமைந்திருக்கிறது எங்கள் எலியின் சாதனை.
    கடைசியாக நாங்கள் சொல்வதை நம்பமறுக்கும் எலியின் (இப்போ புரூஸ்லீ) ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவும். நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை மட்டுமே...!


    ஆராய்ச்சி:
    CrazyBobs

    படங்கள்:
    கதீஸ், பிறைதீஸ்

    கேடய குறிப்பு:
    • படங்களில் முகம் Gimp பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது. (சொன்னால் நம்பவும்)
    • படத்தில் காட்டப்படும் முகம் உண்மையான எலிதான் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. (இனி நிரூபிக்கப்படலாம்)

    செவ்வாய், 7 அக்டோபர், 2008 / 3:45 PM

    தமிழ் ராப் - காதல் பாடல்கள் - சாத்தியமா?

    தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு (முடிந்தால் தொடர் பதிவுகள்).

    தமிழில் ராப் இசைவடிவத்தை யார் முதலில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாற்று ஆராய்ச்சி இங்கு தேவையற்றது, சமகால ராப் பாடல்களை உதாரணமாக கொண்டே இந்த பதிவை எழுதுகிறேன். (ஆகவே இதை selective என்றும் சொல்லலாம் அல்லது filtering என்றும் சொல்லலாம்). இங்கு நான் ராப் பாடல்கள் என்பது 'முழுமையான' ராப் பாடல்கள், ஆங்காங்கே நான்கு வரி ராப் 'தூவப்பட்ட' பாடல்கள் அல்ல.

    காதல் பாடல்கள் என்பது திரை இசை பாடல்களிலும் பிற தமிழ் பாடல்களிலும் மிகவும் அதிகமாக வரும் பாடல்கள் எனலாம். இப்பாடல்களின் வரிகளும் உணர்வுகளுமே அவற்றை முழுமையான காதல் பாடல்களாக ஆக்குகின்றன. இவ்வாறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் காதல் பாடல்களை ராப் இசை வடிவில் கொடுக்க முடியுமா? முடியும் என்பதற்கான சில உதாரணங்களை காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.

    1. காதல் கடிதம் 

    பாடியோர் : கிரிஷான் மகேசன், யௌவனன் (இலங்கை)
    இசைத்தொகுப்பு : Asian Avenue

    காதலை சொல்லும் வரிகள். வரிகளில் தெளிவும் எளிமையும். பாடும் வரிகள் புரிகின்றன. ராப் பாடல்களின் சிறப்பு பாடுபவர்களே வரிகளை எழுதுவது. தங்களின் வரிகளை தாங்களே பாடுவது. உச்சரிப்பில் குறை எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆங்கிகலப்பு சற்றும் இல்லை, ஆனாலும் கேட்பதற்று நன்றாகவே இருக்கிறது.

    டியூனுக்குள் அடக்க ஆங்கில சொல் சேர்ததாக கூறும் திரை கவிஞர்கள் இதை கேட்டு பார்க்கலாம்.
    'உன் கண்ணில் மர்மமோ, ஒரு பார்வையில் கவர்ந்தாய் தர்மமோ...'
    'நீ எனை அறியாய், என்னைப்பற்றி தெரியாய்,
    உன் மேல் நான் கொண்ட நேசம் பற்றி தெரியாய்...'


    2. காதல் எங்கே...

    பாடியோர் : Yogi B, Dr Burn, Mc Jesz (மலேசியா)
    இசைத்தொகுப்பு : வல்லவன்

    தமிழ் திரை பாடல்களை கேட்பவர்களுக்கு அறிமுகமான மூவர். தமிழ் ராப் பாடல்கள் இப்படியும் இருக்கலாம் என்று செய்து காட்டியவர்கள். முக்கியமாக Dr Burn தமிழ் வரிகளை சிறப்பாக கையாள்வதாகவே தோன்றுகிறது. இந்த பாடலில் சற்றே ஆங்கில கலப்பு இருத்தானும், விகுதிக்கு மட்டும் தமிழ்தடவி எழுதும் கவி அரசுகளை விட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
    'பெண்ணே என் மனதில் காயம்,
    எல்லாத் நீ செய்த பாவம்,
    காதல் என்ற வார்த்தை மாயம்,
    உன் காதல் எங்கே பெண்ணே நீ சொல்ல வேண்டும்...'


    3. பூவரசம் பூ

    பாடியவர் : சுஜித் ஜீ (லண்டன்)

    யாழ்ப்பாணத்து தமிழ் உச்சரிப்பில் ராப் பாடல் கேட்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பாட்டு நிச்சயம் பிடிக்கும். வரிகள் சில இசைக்குள் புதைந்துவிடுகின்றன். வரிகள் சற்று பொதுவானவையாக இருக்கின்றன. ஆனாலும் பாடல் கேட்க நன்றாக தான் இருக்கிறது. ராப் என்பது தமது எண்ணங்களை தமது வரிகளால் பாடுவது. அதற்கமைய இதுவும் வித்தியாசமாகவே இருக்கிறது. உரில் அதிகம் காணும் பூவர மரத்தை பாடலில் கொண்டுவந்தது வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் பூவரசம் பூ எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
    'பூவரசம் பூவே நீதான் என் ஜீவரசம்..'
    'என்னத்த சொல்லி நான் என்னத்த செய்ய,
    காதல கடையில சொல்லவா செய்ய.
    பழம் நழுவி பாலில் விழும் எண்டு பாத்தா,
    பழம் இல்லாம பாலும் பழம் பாலா போச்சே...!'


    இன்னும் எத்தனையொ தமிழ் ராப் காதல் பாடல்கள் இருக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் உணர்வுக்கும் மொழிக்கும் களங்கமில்லா தமிழ் ராப் பாடல்களை கொடுக்க முடியும் என்பதை சொல்லவே. ராப் பாடல்கள் எல்லாமே இவ்வாறு நல்லவை என்று சாதிக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் நல்லவற்றை விடுத்து தீயவற்றை மட்டுமே வடிகட்டும் 'திறனுள்ள' அன்பர்களுக்கு, "நீங்கள் அப்படியே இருங்கள்...! :)".
    பாடல்களை கேட்டுப்பாருங்கள். கருத்துக்களை பின்னூட்டத்தில் கூறுங்கள். நான் தான் சரி என்றில்லை, ஆகவே எனது கருத்துக்களில் பிழை இருந்தால் கூறுங்கள். திருத்திக்க்கொள்கிறேன்.


    மீண்டும் சந்திக்கலாம்...

    அன்புடன்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    பி.கு : இந்தியாவிலிருந்து திரை இசை தவிர்த்த தமிழ் ராப் பாடகர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

    Tags: தமிழ் ராப், music, rap music, tamil rap

    திங்கள், 6 அக்டோபர், 2008 / 5:30 PM

    டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்

    [via: HTML aware Twitter]

    டுவீடர், ஒருவகையான கும்மி சேவை என்று சொல்ல்லாம். மனதில் நினைத்த எதையும் 140 எழுத்துக்களில் சொல்லமுடிந்தால் சரி. டுவீட்டரில் நாம் இடும் தகவல்களை எமது வலைத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ காட்டுவதற்கு டுவீட்டர் நிரல்களை  (பிளாகருக்கான பட்டை) பயன்படுத்தலாம். எனினும் அவற்றிற்கு HTML சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

    டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் நாம் இடும் சுட்டிகள் சுட்ட கூடியவையாகவும் (), @நண்பர்கள் (ex:- talkout - @talkout) அவர்களின் பக்கத்திற்கான சுட்டியாகவும் மாறுவதை காணலாம். ஆனால் இந்த வசதி டுவீட்டரில் நிரல்களில் இல்லை.

    இதை செய்வதற்கு பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை. உங்களின் டுவீட்டர் நிரலுக்கு கீழே இந்த நிரலை சேர்த்தால் சரி.

    <script type='text/javascript'>
       document.getElementById('twitter_update_list').innerHTML
          = document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
          /([^\"\'](https?:\/\/([-\w\.]+)+(:\d+)?(\/([\w/_\.]*(\?\S+)?)?)?))/g,
          ' <a href="$2">$2</a>');
       document.getElementById('twitter_update_list').innerHTML
          = document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
          /@([a-zA-Z]+)/g,'@<a href="http://twitter.com/$1">$1</a>');
    </script>

    இதை முயற்சித்து பார்க்கவும். சரியாக வேலை செய்யாவிட்டால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். இதன் செயற்பாட்டை இங்கு பார்க்கலாம்.

    நன்றி:
    சேனக பெர்ணான்டோ - HTML aware Twitter

    கேடயக்குறிப்பு: 
    இதை சேர்ப்பதால் உங்களுக்கு அல்லது உங்கள் வலைப்பதிவிற்கு ஏற்படக்கூடிய உடல், உள பிரச்சனைகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

    அன்புடன்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    Tags: Internet, Twitter, HTML, regular expression, இணையம், டுவீட்டர்

    பேப்பர்கள் - பரீட்சை - திரட்டி - மீண்டும் வருதல்

    கடந்த இரண்டு மாதங்களாக பிற வேலைகள் சற்று அதிகம் இருந்ததால் பெரிதாக எதுவும் எழுத முடியவில்லை. (இல்லாட்டி மட்டும்??)

    முன்குறிப்பு: பின்குறிப்பை வாசிக்கவும்

    முதல்ல ஒரு பேப்பர் தரவேணும் எண்டு சொல்லிச்சினம். பேப்பர் தானே தினமும் வாசிச்சிக்கறம் எண்டால் அது research பேப்பராம், சும்மா எல்லாம் எழுதேலாதாம். ஐ3இ (IEEE) முறைப்படிதான் எழுதோணுமாம். சரியெண்டு ஒருமாதிரி ஏதோ எழுதினம். பிறகு சொல்லிச்சினம் ஒரு draft கொண்டுவாங்கோ எண்டு. சரியெண்டு எடுத்திட்டு போனா அதில ஏதோ சரி பிழை எல்லாம் சொல்லிச்சினம். எங்களுக்கிண்டா எதுவும் விளங்கேல்லை. பரவாயிலை எண்டு formatting மட்டும் மாத்தீட்டு குடுத்திட்டம், என்ன நடக்கும் எண்டு தெரியேல்லை.
    அது முடிச்சா இன்னும் ஏதேதோ assignment எல்லாம் தந்திச்சினம். என்னெண்டு விளங்கிறது முக்கியமில்லை, submit பண்ணுறது தான் முக்கியம் என்ற பெரும் தத்துவத்தின்படி ஒருமாதிரி செய்து முடிச்சம்.

    சரி எல்லாம் முடியுது எண்டு நினைக்க முதலே semester exams வந்திட்டுது. செமஸ்டரில assignments, papers, project work எண்டு சரியா படிக்க முடியேல்லை. (இல்லாட்டி மட்டும்??). சரியெண்டு சொல்லி ஒரு கிழமைக்கு "பரீட்சைக்கான கும்மி" ஏற்பாடு செய்து (இதப்பற்றி இன்னொரு பதிவில விளக்கமா எழுதலாம்), ஒருமாதிரி பரீட்சைகளும் நேற்றோடு முடிஞ்சுது. (இங்க பார்க்க: Done with Exams)

    இதுக்கிடையில சும்மா இருக்க கட்டாம நாமளும் ஒரு திரட்டி செஞ்சா என்ன எண்டு நினைச்சு தொடங்கினது தான் http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/. இதுவரை எதுவும் உருப்படியா செய்ய முடியேல்லை. இனித்தான் எதாவது செய்யோணும்.

    இனி கொஞ்சம் நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுதுவம். உருப்படியா எழுத ஆசைதான், ஆனா ஏனே முடியிறதில்லை. முயற்ச்சிக்கலாம்.

    பின்குறிப்பு:
    பேச்சு வழக்கில் எழுத ஒரு முயற்சி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை என்பது எனக்கே உணரக்கூடியதாக இருக்கிறது. புரியாதவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கேட்கலாம். :)

    அன்புடன்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    Tags: university, exams, research paper, டுவீட்டர், பல்கலைக்கழகம்

    சனி, 4 அக்டோபர், 2008 / 1:45 PM

    PDF கோப்புக்களில் வைரஸ்: கவனம்!!!

    வைரஸ் தொல்லை நம்மில் பலருக்கு தினசரி தலையிடியை கொடுக்கும் ஒரு பிரச்சினை. முக்கியமாக விண்டோஸ் பயனர்களுக்கு இது தாங்க முடியா தலையிடி தான். இதுவரை காலமும் நாம்  இணையத்தில் தரவிறக்கும் மென்பொருள்கள், மின்னஞ்சலில் வரும் கோப்புக்கள், மற்றும் சொருவிகள் என்று நான் சொல்லும் USB Thumb Drives போன்றவற்றின் மூலமே பரவி வந்தது.

    ஆனால் இப்போது பல புதிய நச்சுநிரல் எழுதுபவர்கள் PDF கோப்புக்களை இவற்றிற்கு ஊடகமாக பயன்படுத்துவதாக கூறப்படும். PDF கோப்புக்கள் இன்றய காலகட்டத்தில் பல தேவைகளுக்காகவும் பொதுவாக பயன்படுத்தப்படுவதால் இதன் மூலம் வைரஸ்களை பரப்புவது அதிகரித்துள்ளது.

    எனவே உங்களுக்கு வரும்  PDF கோப்புக்கள் தொடர்பில் கவனமாக இருக்கவும்.

    மேலதிக விபரங்களுக்கு:
    TrustedSource Blog
    கணினி நச்சுநிரல்

    கவனம்!!!

    அன்புடன்,
    நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

    Tags: இணையம், கணனி, வைரஸ், Internet, virus, pdf files