செவ்வாய், 14 ஏப்ரல், 2009 / 9:00 am

என் கதை: நான் காதலிக்காத கதை - முன்னுரை

இதுவரை இந்த வலைப்பதிவில் உருப்படியாக ஒரு பதிவுவேனும் எழுதியதாக இல்லை. ஆதலால் எதாவது 'உருப்படியாக' எழுதலாம் என்று தொடங்குவது தான் இந்தத் தொடர். இது உருப்படியாக வருமா இல்லையா என்பது பற்றி எதுவும் கூறமுடியாவிட்டாலும் இது தொடர்பாக கேட்கப்படக்கூடிய சில கேள்விகளுக்கு என் பதில்கள்.
  1. இது என்ன தொடர் கதையா? சிறுகதையா?
    தொடர் தான், ஆனால் கதை சிறியது.

  2. இதற்கு முன்னர் கதை எழுதிய அனுபவம் உண்டா?
    அம்புலிமாமாவில் வந்த கதையை பெயர் மாற்றி பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய அனுபவம் உண்டு.

  3. ஏன் இந்த விபரீத முயற்சி?
    என்னால் முடிந்தது... ;-)

  4. இது கற்பனைக் கதையா? உண்மைக் கதையா?
    கதை உண்மையானது, ஆனால் சில சம்பவங்கள் கற்பனையானவையாக இருக்கலாம்.

  5. உண்மை என்றால் யாருடைய கதை?
    திரு. நிமலபிரகாசன் என்பவருடையது.

  6. இதில் எந்தெந்த கதாபாத்திரங்கள் உண்மையானவை?
    அனேக பாத்திரங்கள் உண்மையானவையாவே இருக்கும், ஆனால் பெயர்கள் கற்பனையானவை.

  7. இதை எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?
    மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)

  8. இதை தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறதா?
    இப்போதைக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் முடியுமா என்பது முடிந்த பின் தான் தெரியும்.

  9. நாங்கள் இதை வாசிக்கத்தான் வேண்டுமா?
    என் எழுத்தை வாசிப்பது உங்கள் தலையெழுத்து என்றால் வாசிக்கத்தான் வேண்டும்.

  10. வேறு சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் கேட்கலாமா?
    கேட்கலாம், ஆனாலும் பதில் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
முதலாவது பாகத்துடன் விரைவில் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: my story

7 Responses to என் கதை: நான் காதலிக்காத கதை - முன்னுரை

  1. niram
    14 ஏப்ரல், 2009 1:17 pm
    நான் காதலிக்காத கதை என்ற தலைப்பு அற்புதம்.

    மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க என்ற பதில் நச். முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு வெகு ஆர்வமாக உள்ளேன்.

    அசத்துங்க நிமல்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை
  2. சுபானு
    14 ஏப்ரல், 2009 8:07 pm
    இதை எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டது?
    மறக்க நினைக்கும் சிலவற்றை நினைவில் வைத்திருக்க... ;-)
    நல்ல முயற்சி... நாங்கள் வாசிக்கத் தயாராக இருக்கின்றோம்... :)
  3. சுபானு
    14 ஏப்ரல், 2009 8:11 pm
    நான் காதலிக்காத கதை
    தலைப்பே அசத்தலாவும் சின்ன வில்லங்கமாகவும் அல்லவா இருக்கின்றது.. கண்டிப்பாக காதலித்த கதையாகத்தான் இருக்கும்... நல்ல ஒரு காதற் கதையினை எதிர்பார்க்கின்றோம்....

    பொறுத்திருந்து பார்ப்போம்...
  4. ஆதிரை
    14 ஏப்ரல், 2009 8:29 pm
    //இதில் எந்தெந்த கதாபாத்திரங்கள் உண்மையானவை?அனேக பாத்திரங்கள் உண்மையானவையாவே இருக்கும், ஆனால் பெயர்கள் கற்பனையானவை.திரு. நிமலபிரகாசன் என்பவரின் கற்பனைப்பெயரை அறிய முடியுமா?

    கதை வாசிக்க ஆவலாயுள்ளேன்
  5. நிமல்-NiMaL
    14 ஏப்ரல், 2009 10:06 pm
    கருத்துக்களுக்கு நன்றி...
    மிகவிரைவில் முதலாவது பாகம் வரலாம்...!
  6. வேத்தியன்
    15 ஏப்ரல், 2009 9:31 pm
    வாழ்த்துகள் நிமல்...
    கலக்குங்க...
  7. Divyapriya
    16 ஏப்ரல், 2009 6:06 pm
    நீங்களுமா? சூப்பர்...ஆவலாக காத்திருக்கிறோம்...சீக்கரமா கதைய தொடங்குங்க...

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.